நாகாத்த அம்மனுக்கு பால்குடம் எடுத்து திருவிழா

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் பரசலூரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோவிலில் ஆடி மாத கடை வள்ளியை முன்னிட்டு ஏராளமான ஒரு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஒட்டி மூன்றாம் ஆண்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. செம்பனார்கோவில் கடைவீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து நாகாத்தம்மன் கோவில் அறங்காவலர் கே. எஸ். கிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பலர் அருள் வந்து ஆடினர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story