அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊராட்சி செயலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Next Story