ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம் - நின்ற லாரி மீது மோதியதில் ஒருவர் பலி

ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம் - நின்ற லாரி மீது மோதியதில் ஒருவர் பலி
மயிலாடுதுறை அருகே கருவிழிந்த நாதபுரம் பகுதியில் ஒரே பைக்கில் மூன்று பேர் சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது மோதியதில் பைக்கில் அமர்ந்து சென்ற நபர் ஸ்ரீராம் (48) பலியானார்.
. மயிலாடுதுறை அருகே நடராஜ பிள்ளை சாவடியில் பாலசுப்பிரமணியன் மகன் ஸ்ரீராம் (48). என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் சம்பவ தினத்தன்று இரவு 10 மணியளவில் தரங்கம்பாடி செங்கிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணனின் மகன் மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்த பைக்கில் ஏரி, நடராஜர பிள்ளை சாவடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். வாகனத்தில் கருவியைச் சேர்ந்த பிரபுதேவாவும் அமர்ந்திருந்தார். ஒரே பைக்கில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். கருவி மெயின் ரோடு வழியாக சென்றபோது சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக 3 நபர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அதில் சிகிச்சை பவனின்றி ஸ்ரீராம்(48) இறந்து விட்டார் . மற்ற இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்ரீராமின் உறவினர் கணேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் செம்பனார் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story