கலைஞர் நூற்றாண்டு விழா என் உயிரினும் மேலான தலைப்பில் பேச்சுப் போட்டி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்­னிட்டு மயிலாடுதுறையில் மாவட்ட இளைஞரணி சார்பில் "என் உயிரினும் மேலான" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞரணி சார்பில் கழகத் தலைவர் தமிழக முதலமைச்சர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி "என் உயிரினும் மேலான" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுப் போட்டியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் மருது முன்னிலையில் "என் உயிரினும் மேலான" என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்று சிறப்புகளை பேசி அசத்தினர்.
Next Story