பூம்புகார் தொகுதியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி செம்பியன் கோமல் கிராமத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூபாய் 62.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்த நிலையில், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் .முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து கொள்முதல் நிலைய கட்டடத்தின் தரத்தினை ஆய்வு செய்தார். இதில் குத்தாலம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா , ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story