மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐஓபி கிளை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3236 கிளைகள் , மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 22 கிளைகளுடன் இயங்கி வரும் நிலையில், தற்போது 23-வது கிளை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ராகேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு புதிய கிளையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
Next Story