மயிலாடுதுறை நகரில்இரவு நேரத்தில்போக்குவரத்து நெரிசல் பகுதியில் எஸ்பி அதிரடி

மயிலாடுதுறை நகரில் காந்திஜி சாலை, கச்சேரி சாலை, மகாதானதெரு, பெரிய கடை வீதி, பட்டமங்கல கடை வீதிகளில் இரவு நேரத்தில்போக்குவரத்து நெரிசல் பகுதியில் எஸ்பி அதிரடி
. மயிலாடுதுறையில் இரவு 7 மணியிலிருந்து 8.30 மணி வரை காந்திஜி சாலை, பட்டமங்கலவீதி, பெரிய கடை வீதி, மகாதான தெரு, கச்சேரி சாலை ஆகிய வணிக நிறுவனங்கள் மிகுந்துள்ள பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. கடை வாசலில் போக்குவரத்துக்கு இடையூராக இருசக்கர வாகனங்கள் முதல் 4 சக்கர வாகனங்கள் வரை நிறுத்தி வைப்பது தொடர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. ஒரு சில கடைகள் சாலையை ஆக்கிரமித்து இருப்பதாலும் சாலைப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது, இதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தொடர்ந்து ஒன்றுவிட்டு ஒரு நாள் தமது அதிரடி படை வீரர்களுடன் போக்குவரத்து நெரிசில் உள்ள பகுதியில் சென்று சாலையில் இடையூராக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் பணியேற்றதிலிருந்து, இந்த அதிரடி நடவடிக்கை தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் இச்செயல் வரவேற்பு பெற்றதுடன் போக்குவரத்து நெரிசலில் ஏற்பாடுவது தவிர்க்கப்படுகிறது.
Next Story