கலைஞரின் திருஉருவச் சிலையை நாளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின்  வெண்கல திருவுருவசிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே மணல்மேடு கடைவீதியில் உள்ள கலைஞர் படிப்பக வளாகத்தில் எட்டேகால் ( 8 1/4 ) அடி உயரம் கொண்ட கலைஞரின் வெண்கல திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைக்க உள்ளார் . இதனை முன்னிட்டு, இன்று திருவுருவ சிலை அமைந்துள்ள வளாகத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அப்போது எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story