மாப்படுகையில் பொதுமக்கள் மற்றும் போலீஸ் நல்லுறவு சமூக கூட்டம்

மயிலாடுதுறையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு சமூக கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பங்கேற்பு
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.பி., ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கரும்புள்ளி கிராமங்களில் முதற்கட்டமாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் சமூக கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில்  நடைபெற்ற நல்லுறவு சமூக கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்த தகவல் தெரிந்தால் கிராம மக்கள் மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளிக்க கேட்டுக்கொண்டார். மேலும், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கும் வழிமுறைகளை அவர் விளக்கி கூறினார்.
Next Story