சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி சேர்க்கை இல்லை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பரசலூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், பரசலூரில் யூஜிசிக்கு மாணவர்கள் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மானியக் குழு யுஜிசி சர்வாதிகாரத்தோடுமூலம் கபளீகரம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் இதுவரையில் உள்ள நடைமுறையை மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை 2025 என யஜிசியை கொண்டுவந்தது அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இது அடிப்படை கல்வியை தகர்க்கும் முயற்சி. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு இடைநிற்றலை ஊக்குவிக்கும் நிலை ஏற்படும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் மூலமாக மத்திய அரசுக்கும், யுஜிசிக்கும் அனுப்பியிருந்தோம். அதனையொட்டி தற்போது 9 மாநிலங்களில் இதனை எதிர்த்து தீர்மானம் இயற்றியுள்ளனர். நாளை கர்நாடாகாவில் யுஜிசியை எதிர்த்து மாபெரும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பாக கலந்துகொள்கிறேன். இந்நிலையில் மத்திய அரசின் யுஜிசிஐ திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஐந்து தினங்களாக மாணவர்கள் இ-மெயில் மூலமாகவும் செல்போன் மூலமாகவும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் இதுவரை துணைவேந்தர்களாக கல்வியாளர்கள் தான் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்பொழுது துணைவேந்தர்களாக யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அனைத்து படிப்புக்கும் நுழைவு தேர்வு உண்டு என்கிறார்கள் தற்பொழுது நுழைவு தேர்வு இல்லாத நிலை உள்ளது கலைஞர் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். அப்பொழுது கிராமப்புறங்களைச் சார்ந்த 24 சதவீத மாணவர்கள் தான் பொறியியல் படித்து வந்தார் கலைஞர் நுழைவு தேர்வை ரத்து செய்த பின்னர் தான் 75 சதவீத கிராமப்புற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தனர் எனவே யுஜிசி மீண்டும் அதே நிலையை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. அதனை தான் தமிழக அரசு எதிர்த்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர் ஆனால் மத்திய பாஜக அரசு அதனை செய்தே தீருவோம் என்று முனைப்பு காட்டி வருகிறது மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை அதனை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.
Next Story