திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு யானை மூலம் புனித நீர் கொண்டுவரப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் செட்டியார் வடக்கு வீதியில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயத்தில் தை மாத பௌர்ணமி தினத்தன்று யானை மீது புனித நீர் கொண்டு வந்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் செட்டியார் வடக்கு வீதியில் திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மாதம்தோறும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஆலயத்தில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி மூல மந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதற்காக குத்தாலம் கடைவீதி மன்மதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து யானை மீது புனிதநீர் மற்றும் வெள்ளி கவசம் மற்றும் சீர் வரிசைகள் மேளதாளங்கள் முழங்க ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. ஆலயத்தில் பௌர்ணமி யாகம் நடைபெற்றது, தொடர்ந்து பூர்ணாகுதிக்கு பிறகு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்தது. இதனை அடுத்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு திரௌபதி அம்மனுக்கு கட அபிஷேகம் நடைபெற்று பின்னர் மகாதீபாரதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story