குத்தாலம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர்   இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் 5ம் தேதி முதல் கால் யாகசால பூஜைகள் தொடங்கியது. இன்று 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story