பள்ளி மாணவிகள் யோகாசன பயிற்சி-ஆதீனம் பார்வையிட்டார்

பள்ளி மாணவிகள் யோகாசன பயிற்சி-ஆதீனம் பார்வையிட்டார்
X
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி சௌந்தர் திறந்து வைத்தார்:- மாணவர்களின் யோகா மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்
. மயிலாடுதுறையில்   குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தருமை ஆதீனம் நடத்தி வருகிறது.  27-வது   சந்நிதானத்தின்   மணிவிழா முன்னிட்டு  15 வகுப்பறைக் கட்டடம், 2 உடற்கல்விக்கூடம் உள்ளிட்டவை அடங்கிய புதிய பள்ளிக்கட்டடம் ‘ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக மணிவிழா நிலையம்” என்ற பெயரில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.        சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தர் புதிய கட்டடத்தை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார். 27-வது  சந்நிதானம்  தலைமையில்  இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து  ஆசியுரை வழங்கினார். முன்னதாக, இதில், பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய யோகா சாகச நிகழ்வு மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டது  வியக்க வைத்தனர்
Next Story