துணை முதலமைச்சர் பிறந்த நாளில் கரூரில் சைவ உணவுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த திமுகவினர்.
Karur King 24x7 |27 Nov 2025 3:54 PM ISTதுணை முதலமைச்சர் பிறந்த நாளில் கரூரில் சைவ உணவுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த திமுகவினர்.
துணை முதலமைச்சர் பிறந்த நாளில் கரூரில் சைவ உணவுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த திமுகவினர். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை இன்று தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு கரூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆதி சரவண மூர்த்தி தலைமையில் சைவ உணவுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தக்காளி சாதம்,தயிர் சாதம், கலவை சாதம் இனிப்புகள்,தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுக்குழு உறுப்பினர் காலனி செந்தில்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் திவாகர், அருள் முருகன் கார்த்திகேயன் ஸ்ரீநாத், கரூர் மாநகர மாணவரணி அமைப்பாளர் செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
Next Story




