கஞ்சா குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூ வீலர் ஏலம்- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவிப்பு.
Karur King 24x7 |3 Dec 2025 7:37 PM ISTகஞ்சா குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூ வீலர் ஏலம்- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவிப்பு.
கஞ்சா குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூ வீலர் ஏலம்- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவிப்பு. கரூர் மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு இரண்டு சக்கர மோட்டார் வாகனம் சட்டப்படியான அனைத்து அரசு நடைமுறைக்கு பிறகு கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் டிசம்பர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த வாகனத்தை ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பர் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்பு தொகையாக ரூபாய் ஆயிரம் செலுத்தி டிசம்பர் எட்டாம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் எனவும், டூவீலர் வாகனத்தை ஏலத்தில் எடுக்கவில்லை எனில் செலுத்திய காப்பு தொகையை ஏலம் முடிந்தவுடன் திருப்பி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். பொது ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கோரும் நபருக்கு வாகனம் உள்ளது உள்ளபடியே விற்பனை செய்யப்படும். மேலும்,உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத் தொகைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி 9 சதவீதம் மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி எஸ் ஜி எஸ் டி 9 சதவீதம் உடன் சேர்த்து முழுவதையும் ரொக்கமாக செலுத்துவோருக்கு வாகனம் அன்றைய தினமே உள்ளது உள்ளபடியே என்ற நிலையில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவலுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கரூர் மாவட்டம் அவர்களின் அலுவலகத்தினை நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும் எனவும் 9498161573, 94982 04907 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Next Story


