வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட அடி அடிக்கல் நாட்டு விழா.

X
Karur King 24x7 |18 Dec 2025 4:14 PM ISTவேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட அடி அடிக்கல் நாட்டு விழா.
வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட அடி அடிக்கல் நாட்டு விழா. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ புகலூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
Next Story
