கங்கா நகரில் வயிற்று வலி தாங்க முடியாத வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |2 Jan 2026 8:39 PM ISTகங்கா நகரில் வயிற்று வலி தாங்க முடியாத வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
கங்கா நகரில் வயிற்று வலி தாங்க முடியாத வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அகமது தோபி வயது 19. இவர் கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் தனியார் பஸ் பாடி நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் இவரது மூத்த சகோதரர் சையது கோபி என்பவரும் வெல்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருட காலமாக அகமது தோபி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளை சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு பலன் அளிக்கவில்லை. இதனால் விரக்த்தி அடைந்த அகமது தோபி டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் தாந்தோணி மலை கங்கா நகர் பகுதியில் உள்ள அவரது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது சகோதரர் சையது தோபி இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த அகமது தோபி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்
Next Story


