அரசு மேல்நிலைப்பள்ளி +1 மாணவிகளுக்கு சைக்கிள்

மயிலாடுதுறை அருகே நீடூரில் பிளஸ் ஒன் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்
மயிலாடுதுறை நீடூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 மாணவிகள் 62 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 62 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினார். இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story