நீடூர் துணை மின் நிலைய பகுதியில் 10ஆம் தேதி மின் நிறுத்தம்

நீடூர் துணை மின் நிலைய பகுதியில் 10ஆம் தேதி   மின் நிறுத்தம்
மயிலாடுதுறை அருகே நீடூர் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் அதற்குட்ட பகுதிகளில் செவ்வாய் கிழமை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரிய விடுக்கும் செய்திக் குறிப்பு மயிலாடு துறை கோட்ட செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நீடூர் துணைமின்நிலையத்தில் 10.09.2024 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகள் நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லுார், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணாம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுர், மேலமருதாந்தநல்லுர், பொன்மாசநல்லுர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Next Story