தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை நகரின் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியர் முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆடிக்கடைவெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண்கள் 108 திருவிளக்குகள், காமாட்சி விளக்குகள் வைத்து தோஷங்கள் நீங்கிடவும், மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு, லட்சுமி கடாட்சத்துடன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பூஜைகள் செய்து 1008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த வழிபட்டனர்.
Next Story