ரயில் நிலைய புணரமைப்பு 2 ஷீட் விழுந்து விபத்து
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ 22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் முகப்பின் மேற்புறம் ஜிஆர்சி சீட் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் நேற்று நள்ளிரவு 12:00 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்த நிலையில், ரயில் நிலைய முகப்பு மேற்கூறையில் பொருத்தப்பட்டிருந்த தலா 35 கிலோ எடை கொண்ட இரண்டு ஜிஆர்சி ஷீட் பெயர்ந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதை எடுத்து இன்று காலை விபத்து நேரிட்ட இடத்தை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஜி ஆர் சி சீட் பொருத்த பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூ அளவில் மிக சிறியதாக இருந்ததால் விபத்து நேரிட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கூரை முழுவதும் பெரிய அளவிலான ஸ்குரூ கொண்டு மாற்றம் செய்து பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையிலேயே, ஏற்பட்ட இந்த விபத்து ரயில் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story



