வதனேஸ்வரர் ஆலயத்தில் ஆடி கடைவெள்ளி 300 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வதான்யேஸ்வரர் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பூஜை செய்து வழிபாடு நடத்தினர்:-
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வதான்யேஸ்வரர் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பூஜை செய்து வழிபாடு நடத்தினர்:- மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள், ஶ்ரீ மேதா தட்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் 300க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் குடும்பம் சுபிட்சமடையவும், மாங்கல்ய பலம் வேண்டியும் கன்னி பெண்கள் திருமண வரம் வேண்டியும் திருவிளக்கிற்கு மஞ்சள் குங்குமத்தால் 1008 லலிதா ஸகஸ்ர நாம அர்ச்சனை செய்து செய்து வழிபாடு நடத்தினர்.
Next Story