எரவாஞ்சேர ஊராட்சியில் புதிய மின் மாற்றி துவக்க விழாவில் எம் எல் ஏ

மயிலாடுதுறை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா; பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் பொறை யார் அருகே எரவாஞ்சேரி ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 23 கிலோவாட் திறன் கொண்ட ரூ.6 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது . இதன் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு மின் வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு புதிய மின்மாற்றிய தொடங்கி வைத்து பேசினார்.இதில் தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story