ஐடிஐ மாணவனை தாக்கிய சக மாணவர்கள் 5 கைது

மயிலாடுதுறையில் செல்போன் வீடியோ காலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்து ஐடிஐ மாணவனை சகமானவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் 18 வயது நிரம்பாத 5 மாணவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் ஒரு மாணவனை தேடி வருகின்றனர்
:-    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மடவிளாகம் பகுதியில் ஐடிஐ படிக்கும் மாணவன் ஒருவனை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் படுவைரலாக பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது மாயூரநாதர் மேலவீதியில் உள்ள தனியார் (மெய்கண்டார்) ஐடிஐயில் கடந்த 7ஆம்தேதி ஒயரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் இளஞ்செழியன் வகுப்பறையில் வேறு வகுப்பில் பயிலும் மாணவர்கள் அபினேஷ், கனிநிலவன் ஆகிய இருவர் வந்து அமர்ந்திருந்ததை கேட்டது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த 8ம்தேதி ஐடிஐ அருகே மடவிளாகம் பகுதியில் கனிவளவன் கூட்டாளிகளான சுதர்சன், மதிவாணன், புவன்ராஜ், அபினேஷ் ஆகிய 5 மாணவர்கள் இளஞ்செழியனை முகத்திலும், பிடரியிலும் கடுமையாக தாக்கியதோடு வாட்ஸ் அப் வீடியோ காலில் தினேஷுக்கு காட்டி மண்ணிப்பு கேட்க வைத்து செல்பொனில் எடுத்த  வீடியோ வைரலானது. தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து. இளஞ்செழியனை தாக்கிய கனிவளவன், சுதர்சன், மதிவாணன், புவன்ராஜ், அபினேஷ் ஆகிய 5 பேரை கைது செய்த மயிலாடுதுறை போலீசார், தலைமறைவான தினேஷை தேடி வருகின்றனர்.  நாகப்பட்டினம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவர்களில் ஒருவர் 18 வயது நிரம்பாதவர் அவரை மட்டும் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மற்ற நான்கு நபர்கள் நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story