பூம்புகார் தொகுதியில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தின பேரணி

பூம்புகார் தொகுதியில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தின பேரணி
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் திமுக சார்பில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள் அமைதி பேணியை தொடர்ந்து கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின்‌ 6 ஆம் ஆண்டு நினைவு நாள் திமுகவினரால் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மத்திய கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் தில்லையாடி வள்ளியம்மை நுழைவு வளைவில் இருந்து திமுகவினர் அமைதி பேரணியாக புறப்பட்டு திருக்கடையூர் கடைவீதியில் அலங்கத்து வைக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கரன்,ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி சிவராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்தூவி மௌன அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.
Next Story