மயூரநாதர் ஆலய 9 அடி விநாயகர் சிலைக்கு அபிஷேக ஆராதனை

மயூரநாதர் ஆலயத்தில் உள்ள மகா கணபதி தனி சன்னதியில் 9 அடி உயர விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஶ்ரீ மகாகணபதி தனிசன்னதியில் 9 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகராக எழுந்தருளியுள்ளார். இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மகா கணபதி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால், சந்தனம், இளநீர், தேன், பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர்.
Next Story