14ஆண்டுகால சாலை பிரச்சினை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள எடுத்துக்கட்டி சாத்தனுர் பகுதியில் 2,கிமீ தூரம் தார் சாலையை கடந்த 14 ஆண்டுகளாக அமைத்துக கொடுக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடப்பில் போடப்பட்டுளளதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம். இருசக்கர வாகனம் முதல் ஆட்டோக்கள்வரை செல்ல சிரமப்படுகின்றனர் என்றும் தினந்தோறும் சங்கடங்களை அனுபவித்துவருவதாக குற்றஞ்சுமத்தினர். பொறையார் மங்கைநல்லூர் வழி எடுத்துக்கட்டி சாத்தனூர் சாலையில் நாம் மக்கள் இயக்க தலைவரும் வழக்கறிஞருமான ஷங்கமித்திரன் தலைமையில் 50க்கும்மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறையார் காவல் ஆய்வாளர், தரங்கம்பாடி வட்டாட்சியர், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், இந்த சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டு மீண்டும் ஊராசிக்கு மாற்றப்பட்டதால் காலதாமதம் ஆகியுள்ளது என்றும் இந்த சாலையை செப்பனிட ரூ.76 லட்சத்திற்கு டெண்டர் வைக்கப்பட்டுள்ளதாகவும் 15 தினங்களுக்குள் சாலை அமைக்கும் பணி துவங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்,இந்த மறியல் போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது-
Next Story






