கரூரில் என் நண்பன் அறக்கட்டளை 14 ஆம் ஆண்டு துவக்க விழா

கரூரில் என் நண்பன் அறக்கட்டளை 14 ஆம் ஆண்டு துவக்க விழா

மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள் 

கரூரில், என் நண்பன் அறக்கட்டளை 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

கரூரில், என் நண்பன் அறக்கட்டளை 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. கரூரில் செயல்படும் என் நண்பன் அறக்கட்டளை 14 ஆம் ஆண்டு துவக்க விழா நிறுவனத் தலைவர் பொன் முத்துக்குமார் தலைமையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பொது மருத்துவம், கண் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் பரிசோதனை மனநலம் மருத்துவ கவுன்சிலிங் போன்ற பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சையும், கரூரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் துணையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். மேலும், இன்று மாலை, சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story