தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற மாணவிகள்

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற மாணவிகள்

தருமபுரம் ஆதினம்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தருமபுரம் சன்னிதானத்திடம் நேரில் ஆசி பெற்றனர்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்தையா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரவிச்சந்திரிகா என்ற மாணவி அதிக மதிப்பெண் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் இரண்டு பள்ளிகளிலும் முதல் மூன்று மதிப்பெண்கள் பிடித்த மாணவ மாணவிகள், இன்று தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசியும் நினைவுப் பரிசும் வழங்கினார்.

Tags

Next Story