ஏடிஎம் மிஷினை சேதப்படுத்திய 2பேர் கைது

கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஞ்சமாதேவி ஐஓபி கிளை வங்கியின் உதவி மேலாளர் செழியன். இவர், கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு, பெரியார் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில் பஞ்சமாதேவி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் வயது 22, அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் வயது 22 ஆகிய இருவரும் வங்கி கிளையில் அமைக்கப்பட்டிருந்த ஏடிஎம் மெஷின் டிஸ்பிலே பேனலை தடியால் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வங்கி மேலாளருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து,ஏடிஎம் மெஷின் சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, இது குறித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அடித்து உடைத்து நொறுக்கப்பட்ட அந்த ஏடிஎம் மெஷின் சேதம் ரூபாய் 30,000 இருக்கும் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக விக்கி என்கிற விக்னேஷ்வரன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரையும் கைது செய்து, அக்டோபர் 31ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story