வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி - 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலை

வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி - 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை.
வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி - 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது - வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மூலக்காட்டானூர், மாரியம்மன் நகரை சேர்ந்தவர் பாலுசாமி. விவசாயியான இவர் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம் போல் நேற்று ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். இன்று அதிகாலை பட்டியில் இருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது, வெறி நாய்கள் பட்டியில் இருந்து ஓடி விட்டன. வெறிநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளன. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் 12 ஆடுகள் இருந்துள்ளன. அவற்றை மீட்டு தனியாக பட்டியில் அடைத்து விட்டு, கால்நடை மருத்துவருக்கும், பசுபதிபாளையம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 கோழிகளை வெறி நாய்கள் கடித்த நிலையில், இன்று ஆடுகளை வெறி நாய்கள் கடித்துள்ளன. அருகில் டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் அங்கு கொட்டப்படும் உணவு கழிவுகளை, சாப்பிடுவதற்காக வரும் வெறி நாய்கள் இதுபோல செய்வதாகவும், வெறிநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், கடிபட்டு உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு இரண்டரை லட்சம் இருக்கும் என தெரிவித்த விவசாயி, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story