2026ல் த.வெ.கழகம் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைபிடிப்போம்

தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026. அப்போது நாம் கண்டிப்பாக ஆட்சியில் அமர்வோம். இதற்காக நாம் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து சேவை புரிய வேண்டும்:- மயிலாடுதுறையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு:-
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குட்டி.கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மயிலாடுதுறை சேந்தங்குடியில் 30 அடி உயர கொடியை ஏற்றிய ஆனந்த் பேசுகையில் தமிழக வெற்றி கழகத்தின் இலக்கு 2026 அப்போது நாம் கண்டிப்பாக ஆட்சியில் அமர்வோம் இதற்காக நாம் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் மேல வீதியில் 50 அடி உயர கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆனந்துக்கு கட்சியினர் செங்கோலை பரிசாக வழங்கினர். முன்னதாக அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வுகளில் கட்சியினர் 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story