ரயில்வே கேட் அருகே பணம் வைத்து சூதாடிய 3பேர் கைது.

தாந்தோணி மலை ரயில்வே கேட் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 16ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, ரயில்வே கேட் அருகே உள்ள ரமணா கார்டன் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதை கண்டுபிடித்தனர்.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட உப்பிடமங்கலம், புகையிலை குறிச்சனூர் பகுதியைச் சேர்ந்த சங்கர், ராயனூர் இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த தனுஷ், தாந்தோணி மலை வ.உ.சி. தெருவை சேர்ந்த பாரத் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

மேலும், சூதாட பயன்படுத்திய 52- சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பணியில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோனிமலை காவல் துறையினர்.

Tags

Next Story