சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

கரூரில் ரேஷன் கடை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டாங் கோவில் புதூர் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 16ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆண்டாங் கோவில் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட அருகில் உள்ள பாரதி தெருவை சேர்ந்த தேவராஜ், ஆண்டாங் கோவில் புதூர், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சரஸ்வதி நகரை சேர்ந்த பழனிசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் நூத்தி ஐம்பதையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story