முத்து மாரியம்மன் ஆலயத்தில் 37 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

முத்து மாரியம்மன் ஆலயத்தில் 37 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேண்டிருப்பு கிராமத்தில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பால்குட சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் அம்பாள் சிம்ம வாகனம், சூரிய பிரபை, யானை வாகனம், சப்பரம்,குதிரை வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா காட்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். முத்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் புஷ்ப அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

மேலும் பக்தி பரவசத்துடன் 20 அடி நீளம் அலகு குத்தியும் , பூ பல்லக்கினை சுமந்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தமிழ் சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story