வாங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது

வாங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது

காவல் நிலையம்

வாங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், மண்மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள புது காளியம்மன் கோவில் அருகே உள்ள ரவி வீட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, மண்மங்கலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் வயது 29, அதே பகுதியை சேர்ந்த குமார் வயது 48, என்.புதூர்,

சிவந்தி பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் வயது 45, அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வயது 42, ஆகிய 4- பேரையும் கைது செய்தனர். அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 400ஐயும் பறிமுதல் செய்தனர். பிறகு 4- பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story