அமராவதி ஆற்றங்கரையில் பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது

அமராவதி ஆற்றங்கரையில் பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது

காவல் நிலையம் 

அமராவதி ஆற்றங்கரையில் பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட, திருமா நிலையூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் பாரதிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மார்ச் 10ஆம் தேதி மாலை 5 1/4 மணி அளவில், திருமாநிலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அக்ரஹாரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில், பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட திருமாநிலையூர் முதல் கிழக்கு தெருவை சேர்ந்த முனியப்பன், முருகேசன், கோவிந்தராஜ், செல்வகுமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

மேலும் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ஐயும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story