அரசு பள்ளி ஆசிரியையிடம் 4பவுன் தாலிச்செயின் பறிப்பு

அரசு பள்ளி ஆசிரியையிடம் 4பவுன் தாலிச்செயின் பறிப்பு

காவல்துறை விசாரணை


மயிலாடுதுறை அருகே திருச்சம்பள்ளி பகுதி வழியாக பைக்கில் சென்ற அரசு பள்ளி ஆசிரியை பின் மர்ம நபர்கள் தொடர்ந்து சென்று 4 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.
மயிலாடுதுறை சேந்தங்குடி ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் தவமணி(43) இவர் திருக்கடையூர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று மயிலாடுதுறையிலிருந்து பைக் மூலம் திருச்சம்பள்ளி வழியாக காளகஸ்தினாபுரம் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு தனியார் கல்லூரிக்கு பின்புறமாக சென்ற பொழுது இவரை பின் தொடர்ந்து வந்த பைக் ஆசாமிகள் இருவர் திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்செயினை பறித்துக் கொண்டு பறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் நில்லை தடுமாறி கீழே விழுந்த தவமணி, கழுத்தில் பார்த்த பொழுது தம் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலிச் செயின் நான்கு பவுன் வரை அறுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது, சத்தம் போட்டும் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் தவமணி புகார் அளித்தார், அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story