மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 450 மனுக்கள்

மயிலாடுதுறையில் நடந்த் 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாமில், 450 பேர் மனுக்களை அளித்தனர்.
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ், மயிலாடுதுறை நகராட்சியில் 6 வார்டுகளுக்கு, வாசுகி திருமணமண்டபத்தில் ,மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் , காலை 10 மணிக்கு துவங்கியது. மயிலாடுதுறையில் நடைபெற்ற முகாமில் , மாவட்டஆட்சியர் மகாபாரதி கலந்துகொண்டார், எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் குண்டாமணிசெல்வராஜ், ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். 450க்கும் மேற்படோர் மனுக்களை அளித்தனர் மாவட்டஆட்சியர் ஒவ்வொன்றாக கேட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம் தலைமையில், பல்வேறு கட்சியை சேர்ந்த நபர்கள் மாவட்ட பொதுநூலகம் கட்டுவதற்ககு ரூ.6 கோடி நிதி ஒதுக்கியும் இடம் கிடைக்கவில்லை என்றும், அதற்கான இடம் குறித்து மனு அளித்து விளக்கினர்.

Tags

Next Story