கூட்டுறவு வார விழாவில் ரூ.51.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  

கூட்டுறவு வார விழாவில் ரூ.51.31 கோடி  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு

மயிலாடுதுறையில், 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டி, கட்டூரை போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் , மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவுத்துறை சார்பில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 6 ஆயிரத்து 850 உறுப்பினர்களுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

Tags

Next Story