மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.546 கோடி திட்ட முதலீடு இலக்கு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.546 கோடி திட்ட முதலீடு இலக்கு
X
நேரடி ஒளிபரப்பில் கலந்து கொண்ட ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 60 நிறுவனங்கள் உலக முதலீட்டு மாநாடு தொடர்பான கூட்டத்தில் 743.47 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் தொழில்முனைவோர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் உற்பத்தியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.546 கோடி திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி மாவட்டத்தில் இதுவரை 60 நிறுவனங்கள் உலக முதலீட்டு மாநாடு தொடர்பான கூட்டத்தில் 743.47 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் 1650 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்சார்,கடல்சார் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கவும் இத்திட்டத்தின்கீழ் முன்மொழியும் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி,வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படுகிறது. ஆயத்த ஆடைகள்,டிராவல்ஸ், ஜே.சி.பி ,வெள்ளை ஐஸ் கட்டி தயாரித்தல்,கிரேன்,ஆர்எம்சி பிளாண்ட்,கர்னகிரீட் மிக்சர் ,இறால் பண்ணைகள், சிறுதானிய உணவு வகைகள் ஆகிய தொழில்களுக்கு மயிலாடுதுறையில் வாய்ப்புகள் மிகஅதிகளவில் உள்ளது. உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும்,பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செந்தில்குமரன்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் .முத்துசாமி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)ஜெயபால் உள்ளனர்.

Tags

Next Story