ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு ஆங்கில பாடம் வாசிக்க தெரியவில்லை - கடிந்து கொண்ட ஆட்சியர்

ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு ஆங்கில பாடம் வாசிக்க தெரியவில்லை - கடிந்து கொண்ட ஆட்சியர்

ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு ஆங்கில பாடம் வாசிக்க தெரியவில்லை - கடிந்து கொண்ட ஆட்சியர்

மயிலாடுதுறை அருகே பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஆங்கில பாடம் படிக்க முடியாமல் இருந்ததைக் கண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை ஆசிரியரை கடிந்து கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அவர் ஆய்வு செய்தார் அப்போது, வெளிச்சம் இல்லாத அறையில் அமர்ந்து படிப்பதை கண்டு அங்கு மின்விளக்கு எரியவிட உத்தரவிட்டார். தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், மதிய உணவு உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களை படிக்கச் சொல்லி அவர்களது கற்றல் திறனை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் ஆங்கில பாடத்தை வாசிக்க திணறியதை தொடர்ந்து, மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வாசிக்கக் கூட கற்றுத் தரவில்லையா என பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார். மாணவர்களது வாசிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக பார்ப்பேன் எனக்கூறிச் சென்றார்.

Tags

Next Story