கரூரில் 64வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி

கரூரில் 64வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி

Basket ball

கரூரில் 64வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று இரவு துவங்கியது.

கரூர் கூடை பந்தாட்ட கழகம் சார்பில் 64வது அகில இந்திய கூடை கொண்டாட்டப் போட்டி திருவள்ளூர் மைதானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு துவங்குவதாக இருந்தது. கரூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த போட்டி நேரம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் இரவு நடைபெற்றது.

இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் சுதா தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் டெல்லி நார்தன் ரயில்வே ஆண்கள் அணியும், டெல்லி சி.பி.ஆர்.பி.எப் ஆண்கள் அணியும் மோதியது. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடக்க உள்ள இந்த போட்டிகள் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்கள் போட்டியை தொடர்ந்து, இரவு 11 மணி அளவில், பெண்கள் போட்டி துவங்கியது.

துவங்கியவுடன் மீண்டும் மழை பெய்ததால் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. நடைபெற்ற முதல் நாள் போட்டி துவக்க விழாவில், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி உறுப்பினர் சாந்தி, கரூர் கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் சூரிய நாராயணன், இந்திரமூர்த்தி, கமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story