கரூர் மாவட்டத்தில் 9.30 மில்லி மீட்டர் மழையளவு பதிவு

கரூர் மாவட்டத்தில் 9.30 மில்லி மீட்டர் மழையளவு பதிவு

கரூரில் மழைப்பொழிவு

கரூர் மாவட்டத்தில் குறைந்த அளவாக 9.30- மில்லி மீட்டர் மழையளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
வங்கக்கடலில் உருவாகும் புயல் 5ம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் - மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்தது. முன்னதாக 4ம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டத்தில் பரவலாக மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த நிலை காணப்படுகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரத்தில் 2- மில்லி மீட்டரும், மைலம்பட்டியில் 7.3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெய்த இந்த மழையின் அளவு 0.78 மி.மீ.என தெரிவித்துள்ளது.

Tags

Next Story