மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு !

பொள்ளாச்சி அருகே மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொள்ளாச்சி:ஆனைமலைஅடுத்த துறையூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில் ஒன்று இறக்கைகளை அடித்தபடி சப்தமிட்டு கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கு வேலை பார்க்கும் கோபால் என்பவர் அருகில் சென்று பார்த்த போது/சுமார் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு ஒன்று மயிலை விழுங்கிய நிலையில் இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தனியார் அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.நீண்ட போராட்டத்திற்கு பிறகு 12 அடி நீளம் மலைப்பாம்பை சுரேஷ் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைப்பாம்பு பத்திரமாக விடப்பட்டது.

Tags

Next Story