சுற்றுச்சூழலை காக்க பொம்மலாட்டக் கலையுடன் பிரச்சாரம்

சுற்றுச்சூழலை காக்க பொம்மலாட்டக் கலையுடன் பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம்

மயிலாடுதுறை தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை மாற்றுத் துறை சார்பில் பிளாஸ்டிக் பொருளை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
நாடு வெப்ப மாயமாகத்திலிருந்து காப்பதற்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பசுமை படை, ஆகிய வற்றின் சார்பாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மயிலாடுதுறையில் பொம்மலாட்டக் கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆரம்பித்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி கல்லூரி மற்றும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பல்வேறு இடங்களில் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மீண்டும் மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

Tags

Next Story