கரூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து !

கரூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து !

காவல் துறை

கரூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

கரூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், க. பரமத்தி, அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் மகன் அருண்குமார் வயது 33. இவர் ஏப்ரல் 6-ம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூரிலிருந்து கோவை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆண்டனி ஸ்கூல் அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த, கரூர் சணப்பிரட்டி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கனகரத்தின மகன் கேசவன் வயது 28 என்பவர், வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த மாருதி வேகன் ஆர் கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அருண்குமாருக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அருண் குமார் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கேசவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story