பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு.

பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு.

சூதாட்டம் 

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், செல்லிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, செல்விபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த, தண்டபாணி வீட்டில் பண வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தண்டபாணி, அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன், அருகில் உள்ள கோயம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200-யும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story