பெட்ரோல் ஊற்றி கொளுத்திய காதலன் பலி காதலி மீது கொலை வழக்கு பதிவு
காதல் ஜோடி
மயிலாடுதுறை அருகே பெட்ரோல் ஊற்றி தன் மீதும் காதலன் மீதும் தீ வைத்துக் கொண்ட காதலி மீது காதலன் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை பாலக்கரை விஜித்ராயர் அக்ரஹாரம் சாலையில் பல்சர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கல்லூரி காதல் ஜோடி காதல் பிரச்சனையில் காதலி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில்,
தீக்காயமடைந்து திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் உள்ள கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலியுமான சிந்துஜா (22) மயிலாடுதுறை டவுண்டேஷன் பகுதியைச் சேர்ந்த காதலன் ஆகாஷ் கல்லூரி மாணவன் (24) ஆகிய இருவரில் மாணவர் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்உயிரிழப்பு.
ஆகாஷ் அளித்த தகவலின் பேரில் சிந்துஜா மீது மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
Next Story