கரூரில் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில்,ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில்,ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல துணைச் செயலாளர் ராஜா என்ற மன்னன் தலைமையில் ஆர்ப்பாட்டம் கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. முன்னதாக அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட அமைப்பாளர் கவிஞர். பழனியப்பன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் நிலவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், ஊடக மைய மாநில துணை செயலாளர் தளபதி கெஜா, அரவை சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் சுரேந்தர், கரூர் வடக்கு நகர செயலாளர் அருள், தொழிலாளர் விடுதலை முன்னணியின் துணை அமைப்பாளர் விஜயலட்சுமி , கரூர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சந்தானம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி முழக்கமிட்டனர்.

Tags

Next Story